புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நான்காவதாக பிறந்த 9 மாத ஆண் குழந்தையை பிறந்த நான்கு நாட்களிலேயே 5 லட்ச ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக, அங்குள்ள ஒருவர் குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு சென்றபோது, காலப்பனும் அவரது மனைவி செல்வியும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தை மற்றும் பெற்றோரை ஒப்படைப்பதாக ஊர் மக்கள் தகவல் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். பிறகு சில மணி நேரத்திலேயே வீட்டிற்கு வந்த பெற்றோர் மற்றும் குழந்தையை ஊர்மக்கள் சுற்றி வளைத்த பிடித்து அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கு குழந்தையின் பெற்றோரிடம் குழந்தைகள் நல தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையின் பெற்றோர்கள் முரண்பாடான பதில்கள் கூறியதால், சந்தோகமடைந்த சைல்டு லைன் அமைப்பினர், காவல் துறையினரிடம் அவர்களை ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…