Pen statue and Supreme Court [File Image]
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் பேனா சிலைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள் கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், ஜூலை 3ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, தங்களுக்கு ஆதாரம் சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் பேனா சின்னம் தொடர்பான வழக்குகள் நாளை (10.08.2023) ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…