Pen statue and Supreme Court [File Image]
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் பேனா சிலைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள் கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், ஜூலை 3ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. அப்போது, இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்கள் வேண்டும் என உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, தங்களுக்கு ஆதாரம் சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில் பேனா சின்னம் தொடர்பான வழக்குகள் நாளை (10.08.2023) ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…