[Image Source : Twitter/@sunnewstamil]
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் ரூ. 81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது. பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மற்றும் ஒருதரப்பு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குளும் தொடர்ந்தன.
இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரிய மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க தென்மண்டல தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. கடற்கரை ஒருங்காற்று மண்டல மேலாண்மை அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி வெண்ணிலா தாயுமானவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நினைவு சின்னம் தொடர்பாக ஜனவரி 31-ல் நடந்த கருத்து கேட்பு கூட்டம் விதிகளின்படி நடைபெறவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க ஜூன் 19ல் ஆணையம் அனுமதி தந்தது. இந்த நிலையில், எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தென்மண்டல தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…