சீமான் – திமுக இடையே நிலவும் மோதலை முற்றிலும் ஒரு அரசியலாக தான் பார்க்கிறேன் என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் செய்த செயலை மக்கள் வரவேற்கவில்லை. இதற்கு பிரதிபலமாக திமுகவினர் மேடையில் ஏறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன் பிறகு தனக்கு கருத்து சுதந்திரம் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டுதல், வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். இது அனைத்தும் நான் அரசியலாக தான் பார்க்கிறேன் என்றும் இதில் சொல்வதற்கு எதுவும் கிடையாது எனவும் சீமான்- திமுக தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
இது முற்றிலும் ஒரு அரசியலாக தான் பார்க்கிறேன். தங்களை அடையாளப்படுத்தி கொள்ளவும், தங்களை வெளியில் காண்பித்துக் கொள்ளவும் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதற்குமுன் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். கட்சியில் செயல்தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் புதியதாக செயல் தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…