சட்டத்திற்காக மக்களா, மக்களுக்காகச் சட்டமா? என்றும் மக்களுக்காகத் தான் சட்டம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா? என்றும் மக்களுக்காகத் தான் சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 104 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், ராமதாஸ், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசும்போது, புதிய திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திருந்தார்.
மேலும், ஆளுநரின் சட்டப்பேரவை உரை நிதிநிலை அறிக்கைக்கு முன்னோட்டமாக இருக்கும். அதில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசின் சேவையை பெற 100 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு மக்கள் தெரிவிக்கும் குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்ற அறிவிப்பைத் தவிர வேறு புதிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…