கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கட்டபஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக பதவி வகித்து வந்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அவர்கள் தற்பொழுது பணி மாற்றப்பட்டு, புதிய ஆணையராக சங்கர் ஜிவால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், கொரோனா பரவலை தடுக்க சென்னை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா இல்லையா என்பதை காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், கள்ள சந்தைகளில் மருந்துகள் விற்கப்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பதுடன் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…