தமிழகத்தில் பஸ்களை இயக்க வேண்டும் – மக்கள் வேண்டுகோள்

Published by
Ragi

தமிழகத்தில் கட்டுபாட்டுகளுடன் பொது போக்குவரத்தை அனுமதி கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக தடை செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கால் கட்டுமான தொழில்களுக்கும், வணிக நிறுவனங்கள், பால் விநியோகம், உணவு பொருள் வழங்கல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அத்தியாவசிய மக்கள் பணி என்ற முறையில் அனுமதி வழங்கிய போதிலும் அவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல முடியவில்லை. போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருப்பதால் பல தொழிலாளர்கள் தங்களது வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவில் மராட்டியம், டெல்லி, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா ஆகிய பகுதிகளில் கட்டுபாட்டுகளுடன் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று சமூக இடைவெளி, முக கவசம், சானிடைசர் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் பொது போக்குவரத்தை இயக்க வேண்டும் என்று மக்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

தற்போது பொது போக்குவரத்து முடக்கத்தால் தனி மனித வாகன பயன்பாடு, அதாவது இருசக்கர வாகனங்கள் சாலைகளில் அதிகரித்துள்ளது. மேலும் பல ஏழை, எளிய மக்கள் பொது போக்குவரத்தை நம்பி இருந்தனர். தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும் திருமணம், மரணம் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு தனியார் டிராவல்ஸ் ஏஜென்சியை அதிகம் பணம் கொடுத்து நாடுகின்றனர். இதனை எல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்திலும் பொது போக்குவரத்தை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago