திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 3 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மாநில அளவிலான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரையின்படி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பலவேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே, கிட்டத்தட்ட 6 மாத காலமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க கூறி அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
தற்போது வெளியிட்டுள்ள 4 ம் கட்ட ஊரடங்கு தளர்வில், திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…