தமிழகத்தில் 8 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அருள் முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வன்கொடுமை சம்பவங்கள் குறித்து நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் முறையாக அமல்படுத்தபடுகிறதா..? என்பது கேள்வி குறியாக உள்ளது.
போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப்படுத்ததன் காரணமாகவே தமிழகத்தில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது, எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…