ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு.! ஒருவர் கைது.!

Published by
மணிகண்டன்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் என்பவர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கருக்கா வினோத் கடந்த வருடம், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி சென்றவர் என்பது குறிப்பிடக்கது. அப்போது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் ஒழிப்பு! எங்களுடன் துணை நில்லுங்கள்.. பெருமையை உங்களுக்கே தந்துவிடுகிறோம் – அமைச்சர் உதயநிதி

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் பெரும்பாலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தானாம். யாரேனும் தூண்டுதல் பெயரில் இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், ஆளுநர் மாளிகையில் காவல் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago