தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசியான COVISHIELD-ன் 3வது கட்ட பரிசோதனை துவங்கவுள்ளதாக சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது.
அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனேவின் சீரம் பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியான COVISHIELD என்பதை உருவாக்கியுள்ளனர். அதற்கான 3வது கட்ட பரிசோதனையை தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்துள்ளார். மேலும் இந்த 3வது கட்ட பரிசோதனையில் COVISHIELD என்ற கொரோனா தடுப்பூசியை 180 பேரின் உடலில் செலுத்தி சோதனை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…