பெண்களுக்கான புதிய பிரத்யேக திட்டமான பிங்க் ஆட்டோ அறிமுகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னையில் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு இயக்குனர் டி.ஜி.பி.ரவி கலந்துகொண்டு உரிமங்களை வழங்கினார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. ரவி அவர்கள், சென்னையில் ஃபிங்க் ஆட்டோ என்கிற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது, இது தமிழகம் முழுவது என தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் விதமாக பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள 200 பெண்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு இயக்குனர் டி.ஜி.பி.ரவி கலந்துகொண்டு உரிமங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. ரவி அவர்கள், சென்னையில் ஃபிங்க் ஆட்டோ என்கிற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது, இது தமிழகம் முழுவது என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னை மாநகரத்தில் அதை செயல்படுத்த போகிறார்கள் என்றும், இவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம் எனவும், இந்த மகளிர் ஓட்டுநர்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருப்பார்கள் என்றார். மேலும், குழந்தைகள் ஆபாச வீடியோக்கள், தொடர்பாக 600 நபர்களுடைய பட்டியலை தமிழகம் முழுவதும் அனுப்பி இருப்பதாகவும், இதில் ஐந்து நபர்கள் மட்டும் தான் தற்போது வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக காவல்நிலையங்களுக்கு நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில், தற்பொழுது பெண்கள் சிறிய குற்றத்தை கூட உடனுக்குடன் தகவலை தெரிவிப்பதாகவும், காவலன் செயலி மூலம் பெண்கள் தகவல்களை அனுப்பி வைப்பதாகவும், அவர் தெரிவித்தார். இதன் மூலம் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் படி 60 நாட்களில் வழக்குகள் முடிக்கப்படவேண்டும் என்பதால் ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளும் கவனமாக விசாரணை செய்து வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

6 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

7 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

10 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago