தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும் சில நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள “ஆன்டிபாடி” எனும் நோய்எதிர்ப்புசக்தியை பிரித்து எடுத்து கொரோனா பாதித்த நபருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன்மூலம் அந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதுடன், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 6 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளதாகவும், 13 பேரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…