Anbumani ramadoss [File Image]
நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிபப்தை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்து உள்ளது.
இந்த முதல் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் நேற்று வெளியானது. அதில் விஜய், தனது வாயில் சிகரெட் வைத்தபடி புகைப்படத்தில் இருக்கிறார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளின் நடிப்பதை தவிர்க்க வேண்டும். லியோ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. விஜய் திரைப்படங்களை குழந்தைகள் முதல் மாணவர்கள் என அனைவரும் பார்க்கிறார்கள். அவர்கள் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியினை பார்த்துவிட்டு அப்பழக்கத்திற்கு ஆளாகி விடக்கூடாது. பொது மக்களை புகைப்பலகத்திருந்து பாதுகாக்கும் சமூக பொறுப்பு விஜய்க்கும் உண்டு
ஏற்கனவே 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்ததை போலவே திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளின் நடிப்பதை விஜய் தவிர்க்க வேண்டும் என அந்த ட்விட்டரில் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…