2007, 2012 இல் உறுதியளித்ததை போல நடிகர் விஜய் நடந்துகொள்ள வேண்டும்.! அன்புமணி ராமதாஸ் வருத்தம்.!

Published by
மணிகண்டன்

நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிபப்தை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்து உள்ளது.

இந்த முதல் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் நேற்று வெளியானது. அதில் விஜய், தனது வாயில் சிகரெட் வைத்தபடி புகைப்படத்தில் இருக்கிறார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளின் நடிப்பதை தவிர்க்க வேண்டும். லியோ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. விஜய் திரைப்படங்களை குழந்தைகள் முதல் மாணவர்கள் என அனைவரும் பார்க்கிறார்கள். அவர்கள் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியினை பார்த்துவிட்டு அப்பழக்கத்திற்கு ஆளாகி விடக்கூடாது. பொது மக்களை புகைப்பலகத்திருந்து பாதுகாக்கும் சமூக பொறுப்பு விஜய்க்கும் உண்டு

ஏற்கனவே 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்ததை போலவே திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளின் நடிப்பதை விஜய் தவிர்க்க வேண்டும் என அந்த ட்விட்டரில் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

4 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

4 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

5 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

5 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

6 hours ago

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

6 hours ago