Nandhini - Vairamuthu [Image- Twitter/ @sunnews]
வரலாற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு தங்கப்பேனாவை பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பலரும் மாணவி நந்தினி வாழ்த்துக்களை குவித்து வந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தங்கப்பேனா பரிசு:
அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினியை, நேரில் சந்தித்து தங்கப்பேனாவை பரிசளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் கவிஞர் வைரமுத்து.
மேலும், நந்தினிக்கு தங்க பேனா வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, மறுத்தேர்வு எழுதி, அதில் யார் மாநில அளவில் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கும் பரிசு தருவோம் என்று உறுதி அளித்தார்.
விருது பெற்ற நந்தினி:
ஆளுநர் மாளிகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, இந்த நிகழ்வில் தமிழகத்தில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு அவர் விருது வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…