யூ-டியூபர் மதன் தலைமறைவு – போலீசார் தீவிர நடவடிக்கை…!

Published by
Edison
  • பெண்களை ஆபாசமாக பேசிய புகார் தொடர்பாக தலைமறைவாகவுள்ள யூ-டியூபர் மதனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை .
  • மேலும்,யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு போலீஸ் பரிந்துரை.

யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார்.பின்னர்,இந்த வீடியோக்களானது,வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதன்மூலம் மதன் பிரபலமானார்.

இதனையடுத்து,யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில்,பெண்களை ஆபாசமாக பேசி 100 கணக்கான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,பெண்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும்,புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து,யூ-டியூபர் மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பிரவீன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டது.

இதனால்,புகார் தொடர்பாக மதனை இன்று காலை சைபர் கிரைம் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில்,யூ-டியூபர் மதன் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால்,அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிக்க,மொபைல் ஐபி (IP) முகவரி மூலமாக கண்டுபிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

ஆனால்,மதன் தனது வி.பி.என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே வருவதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,யூ-டியூபர் மதனின் வீடியோக்களை முடக்க யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை அலுவலகத்திற்கு போலீசார் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,மதனை பிடித்து,போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும்,தலைமறைவாகவுள்ள மதனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Edison

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago