வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீஸ் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தஞ்சாவூரில் டிம்பிள் ஷியா என்பவர் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
  • வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்திலும் சரி வெளி மாநிலங்களில் மாணவர்கள் வேலையின்மை காரணமாக பல்வேறு கன்சல்டன்சி மற்றும் ஒரு சில ப்ரோக்கர்களிடம் செல்கின்றனர். அதில் குறைந்த நிறுவனங்கள் மட்டும் தகுதியான வேலையை வாங்கி கொடுக்கிறது மற்றவை பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிடுகின்றனர். இதனால் வேலை வாங்கி தரேன்னு சொல்லி பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் களணிகோட்டையைச் சேர்ந்த டிம்பிள் ஷியா என்பவர் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த லோகேஷ்வரனிடம் சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் லோகேஷ்வரனின் நண்பர்களான குணா, பிரவீன் உள்ளிட்டோரிடம் இருந்தும் தலா சுமார் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சொன்னபடி வேலை வாங்கித் தராததால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், டிம்பிளு ஷீயாவை மடக்கிப் பிடித்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அளித்த புகாரின் பேரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்து, டிம்பிள்சியாவிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

56 minutes ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

58 minutes ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

2 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

4 hours ago