யூ-டியூபர் மதனின்,சொகுசு கார்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை தற்போது போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசி பல வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து,யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார். இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். மதன் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக மதன் மனைவி கிருத்திகா இருந்ததால் கிருத்திகா கைது செய்யப்பட்டு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து,யூடியூபர் மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில்,முன்- ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவானது, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதி யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக உள்ளது என்று கூறி முன்ஜாமீன் தர மறுத்துள்ளார்.
இதன்காரணமாக,யூ-டியூபர் மதன்,தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது,தனிப்படை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.இதனால்,மதனை சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்,பெண்களை ஆபாசமாக சித்தரித்தல்,ஆபாசமாக பேசுதல்,ஐடி சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல்,தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக,இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 509,209 B உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில்,மதனின் 2 சொகுசு கார்கள்,3 லேப்டாப் மற்றும் ஒரு ட்ரோன் விமானத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில்,அவரது மனைவி கிருத்திகாவிடம் நடத்திய விசாரணையில்,கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாகவும்,மேலும்,மதன் பிரபலமடைவதற்காக,அவரை புகழ்ந்து பேச ஒரு பெண்ணுக்கு ரூ.5000 கொடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…