பாஸ்போர்ட் இல்லை.. உலக்கோப்பை இருக்கு.? போலி கேப்டன் வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு.!

Published by
மணிகண்டன்

தன்னை மாற்று திறனாளி வீல்சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த வருடம் பாகிஸ்தானில் ஆசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான வீல்சேர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி நடைபெற்றதாகவும், அதில் தான் இந்திய அணியை வழிநடாத்தியதாகவும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு எனும் மாற்றுத்திறனாளி கூறியிருந்தார். அவர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான ஏற்படுகளை செய்வதாக அமைச்சர் செய்வதாக உறுதியளித்தார்.

அதன் பிறகு போட்டியில் வென்றதாக கூறப்பட்ட கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வினோத்பாபு சென்றார். அதன் பிறகு தான் உளவுத்துறை இவரின் மேல் உள்ள சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அந்த கோப்பை போலி, சான்றிதழ் போலி,  இதற்கெல்லாம் மேலாக இவர் பாகிஸ்தான் சென்று விளையாடியதாக கூறியிருந்தார். ஆனால், இவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, ஏ.பி.ஜே., மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சரவணக்குமார், செயலர் டேவிட் வின்சென்ட் ராஜா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தனர். போலி சான்றிதழ், கோப்பை தயார் செய்த வினோத் பாபு மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், வினோத் பாபுவால் மற்ற மாற்றுதிறனாளி வீரர்களின் வாழ்வும் பாதிக்கப்படும் என்றும் கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் தற்போது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வினோத் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

6 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

6 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

9 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

9 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

10 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

11 hours ago