இபிஎஸ்-க்கு புதிய சிக்கல்.! சொத்துக்கள் மறைப்பு புகாரில் சிக்குவாரா.? முதற்கட்ட விசாரணை தொடக்கம்….

Published by
மணிகண்டன்

இபிஎஸ் தனது சொத்துக்களை தேர்தலில் மறைத்த புகாரில் இன்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது சொத்து மறைப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். அந்த தேர்தலில் வழக்கமாக வேட்பாளர்கள் அளிக்கும் சொத்து பட்டியல் விவரம் போல தனது சொத்து விவரத்தையும் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், அதில் குளறுபடி உள்ளது எனவும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களை மறைத்து தேர்தலில் போட்டியிட்டார் எனவும், வழக்கறிஞர் மிலானி என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குப்பதிவின் கீழ் முதற்கட்ட விசாரணையை, மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் சூர்யா மற்றும் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் அடங்கிய குழு தொடங்கியுள்ளனர். இந்த முதற்கட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் உள்ள வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணியில் எடப்பாடி பழனிசாமி மீது புகார் உறுதிசெய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின் கீழ் அவர் மீது புகார் உறுதிசெய்யப்பட்டு விசாரணை அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

9 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

9 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

10 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

10 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

11 hours ago