தமிழகத்தில் ஆங்காகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது, அதிலும் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பொங்கல் பானையை சுற்றி மாணவிகளுடன் கும்மியடித்த அவர், உரியடிக்கும் போட்டியிலும் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காவல்துறை சார்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஆட்சியர் சிம்ரான்ஜித் சிங், டிஎஸ்பி சுரேஷ் குமார் உள்ளிட்டோர் விவசாய பணிகளை மேற்கொண்டனர். விழாவின் ஒருபகுதியாக கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும், சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவின் ஒருபகுதியாக மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருநெல்வேலி ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. முதியவர்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டனர். இந்நிகழ்ச்சி மன நிறைவையும், நிம்மதியையும் தருவதாக தெரிவித்தனர். இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்துவிட்டனர்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…