தமிழகத்தில் ஆங்காகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது, அதிலும் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பொங்கல் பானையை சுற்றி மாணவிகளுடன் கும்மியடித்த அவர், உரியடிக்கும் போட்டியிலும் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காவல்துறை சார்பில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஆட்சியர் சிம்ரான்ஜித் சிங், டிஎஸ்பி சுரேஷ் குமார் உள்ளிட்டோர் விவசாய பணிகளை மேற்கொண்டனர். விழாவின் ஒருபகுதியாக கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மேலும், சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் தனியார் மகளிர் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். விழாவின் ஒருபகுதியாக மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருநெல்வேலி ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. முதியவர்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டனர். இந்நிகழ்ச்சி மன நிறைவையும், நிம்மதியையும் தருவதாக தெரிவித்தனர். இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்துவிட்டனர்.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…