மழைக்காக கொண்டாடப்பட்ட இந்திரவிழா! சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல் விழாவானது எப்படி?!

Published by
மணிகண்டன்
  • தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வரும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை.
  • இந்த பண்டிகை மழைக்காக இந்திரனை வணங்கி, பின்னர் சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது விவசாயத்திற்கு மும்மாரி மழை பொழிய வேண்டும் என மழை கடவுளாக பார்க்கப்படும் இந்திரனை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த இந்திர விழா 28 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

அதன் பிறகு மழை பொழிய, அறுவடை செய்ய, விவசாயம் செழிக்க சூரியன் மிக முக்கியம் என்பதை உணர்ந்த பிறகுதான் இயற்கை சூரியனை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் மார்கழி கடைசி நாள் போகி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் வீட்டை சுத்தம் செய்து, பழைய பொருட்களை கழித்துவிடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கடுத்த நாள் தான் தை முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்டுகிறது. இந்நாளில் இயற்கைக்கு முக்கியமாக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் வைத்து இயற்கைக்கு படைப்பார்கள். சூரியனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

அடுத்த நாள் மாட்டு பொங்கல், அன்றைய நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொங்கல் வைத்து அதனை கால்நடைகளுக்கு படைப்பார்கள்.

அடுத்த நாள், காணும் பொங்கல். இன்றைய நாளில் உறவினர் வீட்டிற்க்கு சென்று அவர்களுடன் சந்தோஷத்தை பகிர்ந்து உறவுகளை வளர்க்கும் நாளாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர் இந்நாளில் குடும்பத்தாருடன் வெளியூர் அல்லது வெளியிடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago