thangam thennarasu [Imagesource : TheHindu ]
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் நேரு
இந்த நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள பேட்டியில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதிகளுக்கு மின்சாரம் வழங்ககூடிய 400கே.வி லைன் பாதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தான் சரிசெய்யப்பட்டுள்ளது.
துணை மின்நிலையங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், இதனால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் தான் தொடர்ந்து பணி செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. மரங்கள் அங்கங்கே முறிந்து விழுந்துள்ளதால், பணிகள் மேற்கொள்வது சற்று சவாலாக உள்ளது. மழை படிப்படியாக குறைந்த பின் மின் விநியோகம் சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…