thangam thennarasu [Imagesource : TheHindu ]
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் நேரு
இந்த நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள பேட்டியில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதிகளுக்கு மின்சாரம் வழங்ககூடிய 400கே.வி லைன் பாதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தான் சரிசெய்யப்பட்டுள்ளது.
துணை மின்நிலையங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், இதனால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் தான் தொடர்ந்து பணி செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. மரங்கள் அங்கங்கே முறிந்து விழுந்துள்ளதால், பணிகள் மேற்கொள்வது சற்று சவாலாக உள்ளது. மழை படிப்படியாக குறைந்த பின் மின் விநியோகம் சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…