சென்னையில் பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம்..! அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

Published by
Dinasuvadu Web

சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் – அமைச்சர் நேரு

இந்த நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து  அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள பேட்டியில், சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதிகளுக்கு மின்சாரம் வழங்ககூடிய  400கே.வி லைன் பாதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது தான் சரிசெய்யப்பட்டுள்ளது.

துணை மின்நிலையங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், இதனால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் தான் தொடர்ந்து பணி செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. மரங்கள் அங்கங்கே முறிந்து விழுந்துள்ளதால், பணிகள் மேற்கொள்வது சற்று சவாலாக உள்ளது. மழை படிப்படியாக குறைந்த பின் மின் விநியோகம் சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

26 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

49 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

11 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

11 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago