சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின், குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி.!

Published by
Ragi

கன்னியாகுமரியில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பலியான பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீண்டகரை-பி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கடல்சீற்றம் நடந்தது. அப்போது கடல்நீர் ஊருக்குள் புகுந்த போது, அப்பகுதியில் உள்ள மரியதாஸ் என்பவருடன் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த மரியதாஸின் மகன் பிரதீப் அஸ்வின் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் லிஸ்டன் என்பவரது மகனான லிபின் மற்றும் சிலுவை என்பவரது மகனான விதுல் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மரணமடைந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அத்துடன் இத்துயர சம்பவத்தில் மிகு‌ந்த வேதனையடைவதாகவும், இறந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமுற்ற இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

16 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

16 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

17 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

18 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

18 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

19 hours ago