மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை… செம்டம்பர், அக்டோபரில் சாலை தோண்ட அனுமதியில்லை … அமைச்சர் எ.வ.வேலு.!

Published by
Muthu Kumar

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு.

தமிழகத்தில் அக்டோபர் மாதங்களில் பருவமழை தொடங்கும் என்பதால், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அக்டோபர் மாதத்திற்கு முன்னதாக மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன் விரைந்து முடிக்கவேண்டும்.

இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக்குப்பிறகு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆகஸ்ட் மாதத்தில் பாலம், வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் அதனை சரிசெய்யவேண்டும் எனவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத காலங்களில் சாலைகளை தோண்ட அனுமத்திக்ககூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகளை மழை தொடங்கும் முன் அதாவது அக்டோபருக்கு முன் முடிக்கவேண்டும் எனவும், மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்றுவதற்கு ஜெனரேட்டர் மற்றும் மின் நீரேற்று பாம்புகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

உடல் நலக்குறைவால் இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்!

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

30 minutes ago

நெல்லை : 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…

1 hour ago

கூகுள் ஃபைண்ட் ஹப் : சிம் எடுத்தாலும் இனிமே போனை கண்டுபிடிக்கலாம்..அசத்தல் அப்டேட்!

கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…

1 hour ago

ரூ.12,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்…பிரதமர் மோடி பீகார் பயணம்!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…

2 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

3 hours ago

மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்ஜாமின்: சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…

3 hours ago