தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருப்பத்துார் ஆகிய 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சென்ற 6ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இதில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 77.43% வாக்குகள் பதிவாகி உள்ளது என தெரிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் 84.30%, செங்கல்பட்டு 66.71%, ராணிப்பேட்டை 80.89%, வேலூர் 77.63%, விழுப்புரம் 83.66%, கள்ளக்குறிச்சி 83.25%, திருநெல்வேலி 70.81%, தென்காசி 73.96% மற்றும் திருப்பத்துார் 78.88% என மொத்தம் 77.43% வாக்குகள் பதிவாகி உள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…