Amithshah Vellore [Image- Twitter/@Sunnews]
புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளோம் வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு.
பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக கூறினார்.
தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி நம் பாரதத்தின் பழமையான மொழிக்கு பெருமை சேர்த்து வருகிறார். உலகில் எங்கு சென்றாலும் திருக்குறள் பேசி, தமிழின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார், மேலும் சோழர்களின் செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் நிறுவியுள்ளோம் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.
முன்னதாக சென்னை கேளம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில் அமித்ஷா, தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெல்ல இலக்கு நிர்ணயிப்போம் என கூறியிருந்தார். அதன்பிறகு, வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது அண்ணாமலையின் தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் நம்பிக்கை வருவதாக அமித்ஷா தெரிவித்தார்.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…