சிறைத்துறையினரை முன்களப் பணியாளராக கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
கொரோனா சூழலில் சிறைக் கைதிகளுக்கு பரோல், மருத்துவர் தூய்மைப்பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்புவது குறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்நிலையில், சிறைப்பணியாளர்களை முன்களப் பணியாளராக கருதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தொற்று அதிகமானால் சிறைக்கைதிகளை பரோலில் விடுப்பு விடுவிப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் பரோல் விடுப்பு பற்றி உயர்நிலைக்குழு முடிவெடுக்க நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 13,854 கைதிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், சிறைப் பணியாளர்கள் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…