சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை வீட்டிற்குள் அடங்கி கிடைக்கும் நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மக்களுக்காக வெளியே வந்து உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவம் பார்த்து மக்களுக்காக உயிரை தியாகம் செய்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட இன்று பலரும் எதிர்ப்பிலும், தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில், மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மறியல் செய்த 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், வேலங்காடு மயானத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கிய 21 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…