போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கு கழக தொழிலாளர்கள் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடைபெறுவதால், போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சத்தியமங்கலத்தில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட பெற்ற நலத்துறை சங்கத்தினர் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bus Strike : பண்டிகைக்கால ஸ்ட்ரைக் முறையற்றது.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதுபோன்று புதுக்கோட்டையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம், செய்யாறு உள்ளிட்ட இடங்களில் ஓடும் பேருந்து முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், காரைக்குடியில் பேருந்தை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தஞ்சையில் பழைய  பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் பேரணியாக வந்த மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் பேருந்தை மறித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரில் தேர்தல் வாக்குறுதிகளுக்கு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Recent Posts

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…எமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

29 minutes ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

55 minutes ago

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…

2 hours ago

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

மும்பை :  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

2 hours ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

3 hours ago