PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர் ,மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததன் காரணமாக,கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ,கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பின்னர்,காவல்துறை அவரை கைது செய்து நேற்று இரவு முழுவதும் விசாரணை நடத்தியது.மேலும், விசாரணைக்கு பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள நீதிபதி வீட்டில் நாகராஜன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில்,PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ராஜ் என்பவர்,தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக,பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில்,கராத்தே மாஸ்டர் ராஜ்,தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,அவர்மீது பல மாணவிகள் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து,மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை அண்ணாநகர் துணை ஆணையர்,கராத்தே மாஸ்டர் ராஜை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…