புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிராந்தியங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, புதுச்சேரியில் பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், ஆறு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது குறித்து, நேற்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன்,புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, அதில், முதல் கட்டமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் யூனியன் பிராந்தியங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், வரும், 5ம் தேதியில் இருந்தும், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள், வரும் 12ம் தேதி முதல், விருப்பத்தின் அடிப்படையில், பள்ளிக்கு சென்று, தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிக்கு வர, கட்டாயம் பெற்றோரின் ஒப்புதல் தேவை. கொரோனா பரவல் அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், பள்ளிகள் திறக்கக் கூடாது. தொற்று பரவல் நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்த ஆலோசனையில் முடிவுகள் எடுக்கப்பட்டுடன.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…