தெருவில் இறங்கி கிருமி நாசினி தெளித்த புதுச்சேரி முதல்வர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா வைரசால் 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 86 பேர் குணமடைந்துள்ளர்கள் என மத்திய சுகதர்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைகள் எடுத்து வருகிறது. இதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரைஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் நாராயணசாமி தமது நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள மார்க்கெட்டில் ஆய்வு செய்த அவர் பொதுமக்கள் இடைவெளி விட்டு பொருட்கள் வாங்குவதற்கும் முக கவசம் அணிவதற்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து வெண்ணிலா நகரில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட போது, முதலமைச்சர் ஊழியர்களிடம் இருந்த மருந்து தெளிப்பானை வாங்கி தெரு முழுவதும் இரண்டு பக்கமும் மருந்து அடித்தார் முதலமைச்சர். புதுச்சேரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago