புதுச்சரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி கொலை – உயிரை பிரித்த பதவி!

Published by
Rebekal

புதுச்சரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மணிகண்டன் என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நெல்லித்தோப்பு மார்க்கெட் எதிரே வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உருளையன்பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். விஜய்சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் அல்லது இவர் செய்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க இது நடந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் கூறும்போது விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் மணிகண்டன் உறவினர் ராஜசேகர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பதவி போட்டியால் ராஜசேகர் ரசிகர் மன்றத்தில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சமாதான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று உள்ளது .அதனை அடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின் அங்கிருந்து கடந்து சென்ற மணிகண்டனை சிலர் பின்தொடர்ந்து சென்று கொலை செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது என போலீசார் கூறினர். சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து விரைவில் கண்டுபிடித்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago