புரெவி புயல் சின்னம் காரணமாக சென்னை முதல் குளச்சல் வரை இருக்கும் 11 துறைமுககளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் காரணமாக சேதங்கள் அதிகம் இல்லை என்றாலும், பல இடங்களில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிவர் புயலின் தாக்கம் முடிவடைந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று இரவு புயலாக வலுவரும். இந்த புயலுக்கு “புரெவி” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், காரைக்கால், குளச்சல் உள்ளிட்ட 11 துறைமுககளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரைவில் கரை திரும்பநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…