தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என நேற்று திமுக அறிவித்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக பிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்து. பின்னர், பிரியா ராஜனுக்கு ககன் தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால், சென்னை மாநகராட்சியின் 49-வது மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றார். இந்த மறைமுக தேர்தலுக்கான கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் 15 பேரும் பங்கேற்கவில்லை, ,பாஜக கவுன்சிலர் கலந்துகொண்டனர்.
28 வயதான பிரியா ராஜன் எம்.காம் பட்டதாரியாக உள்ளார். பிரியா ராஜன் முன்னாள் எம்.எல். ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார். வடசென்னை பகுதியான திரு.வி.க நகரிலுள்ள 74-வது வார்டில் பிரியா ராஜன் வெற்றி பெற்றார். இதற்கு முன் தென்சென்னையை சந்தவர்களே திமுகவின் மேயராக தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…