கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 569 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14, 753 ஆகஉள்ளது. அதிலும், சென்னையில் 9364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் வரை நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கு புதிதாக ஏற்படும் தொற்றுகள் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த 100% முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே வழி என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையின் 3 மண்டலங்களில் நோய்த் தாக்கம் குறைந்து வருவதாகவும் கூறினார். பொதுவாக கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் , சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் என்பது குறிபிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…