தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார்
தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார். அதேபோலவே, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அவருக்கு பதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை பொறுப்பேற்பார் எனக்கூறிய நிலையில், தற்பொழுது அவர் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், 2012 – 2019 ஆம் ஆண்டுகளில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…