[Representative Image]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று விருத்தாசலத்தில் போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போது பேசிய கேஎஸ் அழகிரி, பின் வாசல் வழியாக ராகுல்காந்தியை முடக்க மோடி அரசு முயற்சி செய்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடுவதை தடுக்க பாஜக முயற்சி செய்கிறது. ராகுல் காந்தி தான் மக்கள் மன்றத்தில் வெற்றி பெறுவார். நரேந்திர மோடி உண்மையான அரசியல் தலைவராக இருந்தால் தேர்தல் களத்தில் மோதுங்கள் எனவும் கூறினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…