சகோதரர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கவலை அடைந்தேன் என முக ஸ்டாலின் ட்வீட்.
லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் நலம்பெற வேண்டுகிறேன் எனவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து நலம்பெற வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சகோதரர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கவலை அடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்குமாறு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…