Rahul udhaynidhi [Image-PTI & IE]
மணிப்பூரில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.
மணிப்பூரில் கலவர சம்பவங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று மணிப்பூரின் இம்பால் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து பேசுவதற்காக சென்று கொண்டிருந்த போது, பிஷ்னுபூரில் ராகுலின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதற்கு மேல் ராகுல் காந்தி செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக்கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அமைச்சர் உதயநிதியும் இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி தனது டிவீட்டில், ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கின்ற நிலையில், ராகுல் காந்தி மணிப்பூர் மக்களை சந்தித்து பேச முயற்சி செய்கிறார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டுவருவது தான் முக்கியம். எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கும் செயலைக் கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…