விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன? என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார். அப்போது ரஜினி தன்னிடம் மாற்று அரசியல் என்று கூறுகிறீர்கள். மாற்று அரசியலின் முதல் படியிலாவது நான் கால்வைக்க வேண்டாமா என்று கேட்டுவிட்டு, கட்சியையும் ஆட்சியையும் தனித்தனியாக பிரிக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியலை தூய்மைப்படுத்தவே ரஜினி அரசியலுக்கு வருகிறார்.
இதுபோல திமுகவில் ஒருவரை காட்டுங்கள் பார்க்கலாம். அதிமுகவினர் தற்போது ஒவ்வொரு துறையிலும் எப்படி வருவாய் ஈட்டலாம் என திமுகவுக்குக் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு உள்ளனர். இதனால்தான் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது. சிஏஏ சட்டம் மூலம் ஒருவரை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியும் என்று நிரூபிக்கத் தயாரா? இதைத்தான் ரஜினி சொல்கிறார். அப்படி நிரூபித்தால் முதல் ஆளாக ரஜினியாகத்தான் இருப்பார் என்று கூறினார். இதனிடையே சில நாட்களுக்கு முன் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து தமிழருமணியன் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…