சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை 8,718 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், நேற்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் தான் 828 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் சென்னையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கோடம்பாக்கத்தில் 796, திரு.வி.க நகரில் 622, தேனாம்பேட்டையில் 522, வளசரவாக்கம் 426, அண்ணா நகர் 405 போன்ற மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…