மண்ணெண்ணெய், கோதுமை குறைப்பு.. ஏழை மக்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி குற்றசாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது என அமைச்சர் பேட்டி.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் 30 லட்சம் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என கூறினார்.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது 7536 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, தற்போது 2712 லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் முறையான பதில் இல்லை என குற்றசாட்டினார்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மண்ணெண்ணெய் வைத்தே வாழ்கை நடத்துகின்றனர். இந்த சமயத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது. மத்திய அரு நடவடிக்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு வழங்கி வந்த கோதுமை ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 15,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளோம். கோதுமையை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

26 minutes ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

1 hour ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

2 hours ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

3 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

4 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

4 hours ago