மண்ணெண்ணெய், கோதுமை குறைப்பு.. ஏழை மக்கள் பாதிப்பு – அமைச்சர் சக்கரபாணி குற்றசாட்டு!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது என அமைச்சர் பேட்டி.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டில் 30 லட்சம் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என கூறினார்.

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது 7536 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, தற்போது 2712 லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் முறையான பதில் இல்லை என குற்றசாட்டினார்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மண்ணெண்ணெய் வைத்தே வாழ்கை நடத்துகின்றனர். இந்த சமயத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்துள்ளது வேதனை அளிக்கிறது. மத்திய அரு நடவடிக்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு வழங்கி வந்த கோதுமை ஒதுக்கீட்டையும் மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 15,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளோம். கோதுமையை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

15 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

24 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

49 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

17 hours ago