TNGovt [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
அனைத்து பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு ஜூலை 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிப்பு.
தமிழகத்தில் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு ஜூலை 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000 லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1% ஆக உயர்கிறது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
செட்டில்மென்ட் பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்ட்டுள்ளது.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…