திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு போயுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில், அதிமுக கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டதாகவும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏதாவது ஒரு கரணம் கூறி அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என குற்றசாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டு போயுள்ளது என்றும் கொள்ளை, கொலைகள் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு தொண்டனும் வீறு கொண்டு எழுந்தது நாம்தான் வேட்பாளர் என்று எண்ணி களத்தில் இறங்கி தேர்தல் என்ற போர்க்களத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெறுவோம், வெல்வோம் என்றும் எதிரிகள் எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும் அதை முறியடிக்கும் திறமை அதிமுக தொண்டர்களுக்கு உண்டு எனவும் எழுச்சியுடன் பேசியுள்ளார்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…