காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Published by
Venu

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில்  காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார் .

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ளார் அறிக்கையில்,திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ,அவரவர் மாநிலங்களுக்கு , அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன் ,படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டிலிருந்து இதுவரை சுமார் 13,000 வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதியன்று அணுமின் நிலைய வாயில் அருகில் வெளிநாமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்லவேண்டும் என்று கோஷமிட்டனர்.அவர்களிடம் அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகளை  எடுத்துக்கூறி கலைந்து செல்ல காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.ஆனால் சில தொழிலாளர்கள் கலைந்து செல்ல மறுத்து,காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதில், கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி  ஜெகதா மற்றும்  காவல் வாகன ஓட்டுநர் சக்திவேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது.அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.இந்நிகழ்வில் பலத்த காயமடைந்த காவலர் சக்திவேல் அவர்களுக்கு 2 லட்சம்  ரூபாயும்,லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா அவர்களுக்கு ஒரு லட்சம்  ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவரான நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  

Published by
Venu

Recent Posts

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

11 minutes ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

26 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

53 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

1 hour ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

2 hours ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

2 hours ago