கட்டடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் 2வது முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் 2வது முறையாக ரூ.1000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதையடுத்து பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான 15 கிலோ அரிசி, துவரம் பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடியவிருந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனை பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144இன் படி ஊரடங்கு நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுவதால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். இதையடுத்து தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை என்றும் அதில் பார்சலுக்கு மட்டும் அனுமதி என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…