சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, 3 சிறப்பு ரயில்களை வருகின்ற 12-ம் தேதி முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது. இதனால், 12 ஆம் தேதி முதல் செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது.
இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, திருச்சிக்கு இரவு 8.10க்கு வந்தடையும். பிறகு காலை 6.30க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்கு பகல் 12.40க்கு வந்தடையும்.
மேலும், திருச்சிலிருந்து, செங்கல்பட்டு வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த, ரயில் அரியலூர் ,விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செல்லும். திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு 11.30-க்கு செங்கல்பட்டு சென்றடையும். பின்னர், செங்கல்பட்டில் இருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு திருச்சியை வந்தடையும்.
அரக்கோணம், கோயம்புத்தூர் வரை ஒரு சிறப்பு ரயில் இயங்க உள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்லும். அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 2.05 மணிக்கும்,பின்னர், கோவையில் இருந்து 3.15 மணிக்குப் புறப்பட்டு, அரக்கோணத்துக்கு இரவு 10 மணிக்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 சிறப்பு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் (unreserved) கிடையாது என என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…