ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாள் இரவே திடீரென்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் குளிர்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் குழுவினருடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது குளிர்விப்பான் பகுதியில் பழுது சரி செய்யப்பட்ட நிலையில், ஆலையில் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று பிற்பகல் முதல் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…