ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாள் இரவே திடீரென்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் குளிர்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் குழுவினருடன் இணைந்து, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது குளிர்விப்பான் பகுதியில் பழுது சரி செய்யப்பட்ட நிலையில், ஆலையில் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று பிற்பகல் முதல் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் லாரி மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…